Friday, May 13, 2016

கறபனைகளில் இன்னும் உன் ...


வழக்கம் போலவே
வந்து இறங்கியது அந்த நிழல்
வட்டங்களை விட்டு விலகிய போதும்
கட்டங்கள் கடந்து நடந்த போதும்
விலகி நின்று ...
விழிகளை மட்டும் பதித்திருந்தது..

அவசரங்களில்
சற்று மறந்து நிதானித்த போதும்
மறைவில் தன் வருகையை
உணர்த்தியவாறே சிரித்தபடி
அந்த நிழல் ...
தொட முயன்றும் தொட விடா
தூரம் நின்றே... ரசித்து
விளையாடியபடியே என்னிடம்..

கற்பனை நீளும் நேரம்
தூவல் கொடுக்கும் பணியாளாய்
ஓவியம் வரையும் நேரம்
தூரிகை நீட்ட துடிப்பவளாய்..
ஏதோ ஓர் ரூபத்தில்
உன் வருகை உணர்த்த
முயன்றபடியே.. நிழலாய்!
தொட முயலும் தருணமெல்லாம்
கானல் நீராய்....

சூரியன் அறையும் நேரம்
சட்டென விழிக்க....
ஜன்னலுக்கு வெளியே வெகுதூரத்தில்..

நிழலாகவே நீண்டு கொண்டு ...

**முனியாண்டி ராஜ்.***

No comments:

Post a Comment