Friday, May 13, 2016

அம்மா

    💐🌾🍁அம்மா💐💐🍁🌷
    எந்தக் கல்லூரியிலும்
    பட்டமளிப்பு செய்யப்படுவதில்லை..
    எந்தப் பள்ளியிலும்...
    பாடத்திட்டமாய் இல்லை
    எந்தக் கருத்தரங்குகளிலும்
    கழுத்தறுக்கப்படுவதுமில்லை ...
    எப்படியம்மா கற்றாய்
    அன்பின் அத்தனை பாடங்களையும்!!

    வாழ்க்கை முதல் அடியின்
    அறிமுகம் நீ..
    இறுதி நழுவலின்
    நம்பிக்கை நீ ...
    உறவுகளின் உயிரெழுத்தாய்
    அகரத்தின் சிகரமாய்
    அறிவின் முதல் ஊட்டலாய்..
    பேச்சின் முதல் வார்த்தையாய்
    அன்பின் தலை அரவணைப்பாய்
    எப்படி வந்தது அனைத்தும் !
    தலைசாயும் நேரம் மடியாய்
    தன்னம்பிக்கை தளரும் நேரம்
    மூன்றாம் கையாய்..
    கண்ணீர் அணைக்கும்
    பதினோராவது விரலாய்...
    எரியும் தீயிலும்
    தணிக்கும் நீராய் ......
    ஒவ்வொரு நொடியிலும்
    நீயாகவே தெரிகிறாய் ....
    வாழும் தெய்வமாக!!
    *முனியாண்டி ராஜ்.*

No comments:

Post a Comment