Sunday, April 2, 2017

துளி

ஒரு மழைக்குளிரின்
சில்லென்ற இரவுப் பயணத்தில்
சட்டென அறுந்து விழுகின்றன
கண்களின் எச்சத் துளிகள்
கரும் உருவங்களாய்
சீறி மறையும் மரங்களிலும் பாறைகளிலும்
கவனம் அவ்வப்போது பாயும்போதும்
முகங்களில் அறையும் எதிர்வரிசைகளில்..
உன் எச்சரிக்கைகளின் எதிரொலிகளில்
விழிகள் விரிந்து கொண்டே
தூக்கத்தைக் கடக்கும் இரவுகள்

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment