Sunday, April 2, 2017

இரவின் கவிதை ஒன்று


திடீரென தூக்கத்தை உலுப்பி எடுத்து
எழுப்பியிருந்தது அந்த நிலா..
விலகிய ஜன்னல் சீலைகளில்
மழை நின்று மேகங்கள் விலகியிருப்பது தெரிந்தது
கொஞ்சமாய் எட்டிப் பார்த்த
என்னைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கியது
களவு போன உறக்கங்களைத் தேடி
மீண்டும் உறங்க முயன்றும்
வைத்த கண் வாங்காமல்
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது அந்த
மழையில் நனைந்த நிலா….
துவட்டிவிட கைகள் இருந்தும்
மனம் மறந்த இடங்களைத் தேடி
போர்வைக்குள் ஒளிந்து
தூக்கங்களை ஏமாற்றிக் கொண்டே ….

இரவும் அப்படியே கழிந்தது
இருண்ட அந்த நிலவுக்காக!!!


**முனியாண்டி ராஜ்.**

No comments:

Post a Comment