Sunday, April 2, 2017

ஹைக்கூ004

மழை விட்டும்
தூவானம் மட்டும் தூறியபடியே
சன்னல் சாளரத்தில்
-—-----------------------------------
இரவுக்குள் நுழைந்தும்
நிலா மட்டும் ஒளிந்திருக்கிறது
மேகத்திற்குள்
---------------------------------------
கரையைத் தழுவிய அலைகளில்
கரையாமலேயே இருந்தது
காலடிச் சுவடு
-----------------------------------------
புத்தகப் பையைச் சுமந்தபடியே
மாணவன் கேட்கிறான்
கல்வி அவ்வளவு பாரமா
-----------------------------------------

No comments:

Post a Comment