Wednesday, April 26, 2017

நிறங்கள் மங்கிய ஓவியங்களில்..



வருடங்கள் மறந்த
ஒரு பேருந்து பயணத்தில்
சில கவிதைகளுடன் நீ
அருகருகே இருக்கைகளில் ஏதோ ஒன்றை
முணுமுணுத்தபடி நெஞ்சில் சாய்ந்து
அண்ணாந்து பார்க்கிறாய்
கண்களுக்குள் நுழைந்து
இதயம் விதானங்களில்
ஓவியங்கள் வரைந்தவாறே...
என்னைக் கடந்து ஓடும் இருள்கவிழ்ந்த மரங்களிலும் செடிகளிலும்
முடிவு பெறாத தேடல்களில்
மனம் மௌனித்துப் பயணிக்கிறது
இருள்கவிழ்ந்து கிடக்கிறது
உள்ளும் புறமும்!

குளிரை ஆவேசமாய்த் துப்பும்
பேருந்தின் சீற்றத்தில்
பக்கத்திருக்கை அரமற்று கிடக்கிறது
சில வார்த்தைகளை உதிர்க்க முயன்று
உதடுகளுக்குள் ஒளித்துக் கிடக்கிறேன்
நீ முணுமுணுத்த வார்த்தைகளைப்
இருக்கைகள் எங்கும் தேடுகிறேன்
இன்றும் கடந்தோடுகின்றன
இரவுகள் அணிந்த மலைகளும் மரங்களும்
என் பார்வைகள் பொருட்டன்றி!

நிறம் மங்கினும்
நீ வரைந்த ஓவியங்கள் மட்டும்
இதய விதானங்களில்..
எதையோ கூற முயன்று!

No comments:

Post a Comment