Sunday, April 2, 2017

துரோகம்


சட்டென முகம் இழுத்து
முதலையின் வாயிலிருந்து விடுபட்டேன்
காட்டு விலங்குகள் கொடூரமாய் பாய
ஆபத்தின் சிக்கல்களை அறிவு
மீட்டெடுத்தது.....
குழிக்குள் விழப்போன காலை
விழிகள் அன்பாய் காப்பாற்றின....
வாழ்த்து சொன்ன நண்பன்
தோளில் கை போட்டான்...
மெல்ல மெல்ல கழுத்து இறுக்கப்பட்டும்
மனம் மட்டும் ஏனோ...
உயிர் போகும் தருணம் எச்சரித்தது
காலம் கடந்து!!!

**முனியாண்டி ராஜ்.**

No comments:

Post a Comment