Sunday, April 2, 2017

படைப்பு


விரல்களிலிருந்து விரிந்து பறக்கும்
அந்தப் பட்டாம் பூச்சிகளைத்தான்
அவள் கவிதைகளென்கிறாள்
அந்த இளம் சிறகுகளின் படபடப்பில்
அத்துணை ஆர்வம் அவளுக்கு
அவள் இமைகளின் நகல்கள்
அவை என அறியாமல்
விழிகளை நகர்த்தவே மறந்திருப்பாள்
அதெப்படி
உங்கள் விரல்களிலிருந்து மட்டும்
பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன என
வியப்போடு கேட்கிறாள்

போடி பைத்தியக்காரி..
உன் கண்களைக் கண்ணாடியில்
பார்த்ததே இல்லையா என
எப்படிக் கேட்பேன்

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment