Sunday, April 2, 2017

இசையற்ற வரிகளாய்...

இசையற்ற வரிகளாய்...
===•••===•••===•••===
ஒரு செந்தூராவின் துணையுடன்
தனியனாய் ஒரு
இரவு நேர தூரப் பயணத்தில்
நாழிகை கடக்கும் பயணங்களில்
திடீரென அலை மாறிய செந்தூரன்

ஜன்னல் விலகிய திரைச்சீலைகளின்
கொடையில்
தூரத்து வெளிச்சத்தின் நிழலில்
மௌனங்கள் கடந்து செல்கிறாய்
கனங்களை என்னுள் இறக்கிவிட்டு

எஞ்சிய காப்பியின் காய்ந்த சாயல்களில்
எதையோ வரைந்து வைத்தது போல்
ஒழுகலும் ஓவியமாய் தெரிய..
நீ
வரைந்திருக்க நியாயமில்லை என
உள்மனதோரம் முனகும் குரல்

ஒவ்வொரு அலையாய் தாவியும்
எதிலும் இருப்புக் கொள்ளாமல்
தூரங்களில் வீசியெறியப்படும் தொலையியக்கியாய்
வண்ணம் தொலைத்த ஓவியம் போல்தான்
மனமும்

கனவை விலக்கி வைத்து விட்டு
கதவைத் திறக்கையில்
விரிந்து கிடக்கும் செவ்வானத்தில்
செந்தூரா மீண்டும் மிதந்து வருகிறது
இசையாய்!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment