Sunday, April 2, 2017

ஒரு கவிதையின் தொடக்கம்


ஒரு கவிதை வார்த்தைகளைத் தேடி 
அங்கும் இங்கும் அலைந்தவாறே..
சொல் என்கிறாய்
இருளுக்குள் ஒளிந்த வெளிச்சம்போல்
வார்த்தைகளை விழிகளுக்குள் ஒளித்துக் கொண்டு!

நீயென்றேன்..
புருவங்களில் ஒளிந்திருந்த
ஒரு வரி ...
சிலிர்த்த ஒரு முறுவலுடன்
அப்படியே இறங்கி நடக்கத் தொடங்கியது
என்னைக் கடந்து !!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment