Monday, October 19, 2015

தூரங்களைத் தேடி....


தூரம் தெரியாத ஏதோ ஒரு திசையில் நின்று கொண்டு
கையசைத்துக் கொண்டே இருக்கிறாய்…
காலம் தேய்த்துப் போட்ட
நினைவுகளின் பக்கங்களில்
ஏதோ தட்டுப்போடுவது போல்!

முகநூல்களின் அழைப்புப் பக்கங்களில்
பல தடவை உன்னை நிராகரித்தும்
நீ எப்போதும் போல்
கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறாய்…
உனக்கான அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை!

மனதிலின்று நீ கழன்று கொண்ட பிறகு
என் விரல்கள்
உன் முகவரிகளைத் தீண்டியதே இல்ல….
உன் பக்கமிருந்து வீசும் காற்றைக் கூட
கவனமாய் விலக்கியிருக்கிறேன்….

ஏதோ ஒரு சந்திப்பில்
நமது பார்வைகள் விபத்துக்குள்ளாகலாம்..
அதுவரை..
என்னைக் கவனமாய் பூட்டியே வைத்துக்கொள்கிறேன் !!!

என்னிலிருந்து நானே நழுவும் வரை!!!


No comments:

Post a Comment