Monday, October 19, 2015

விடாமல் பெய்யும் மழை

ஒரு குடையின் கீழ்
இன்னும் மௌனமாகவே நனைந்து கொண்டிருக்கிறது
மழை..
உதடுகளில் சிக்கிய வார்த்தைகளை
உடைக்கத் தெரியாமல்
மனம் முரண்டு பிடித்தும்…

ஒட்டியும் ஒட்டாமலும் செல்லும்
விரல்களின் மெல்லிய மின்சாரத்தில்…
விழிகள் அவ்வப்போது பற்றிக் கொண்டு
மீண்டும் அணைந்து விடுகின்றன..
பட்டென விரல்கள் விலகி
மின்சாரங்களை நோக்கி மெல்ல நகரும்
தருணங்களில்!!

பேசாமல்
குடையை வீசிவிட்டு நடந்தாலாவது…
மழை நம் காதலைக் கொஞ்சமாவது
எடுத்துக் கூறும்!

No comments:

Post a Comment