Monday, October 19, 2015

மீதமிருக்கும் பொழுதுகள்


பரணுக்குள் பாதுகாப்பாய்
படுத்திருந்தது அந்தக் காகிதக் கட்டு..
தூசுகளைத் தட்டித் தட்டிப் படித்தில்
தும்மலுக்குள் துவண்டு விழுந்தது மூச்சு
‘யாரோ உங்களை நினைக்கிறாங்க’
என்ற குரலில்
உதடுகள் புன்னகையை மறைத்துக் கொண்டன

கட்டுக்களிலிருந்து உதிரும் ஒவ்வொரு மடலிலும்
மனம் புரண்டு புரண்டு படுத்தது…
இரவின் விளிம்புகளிலும்
காத்திருப்பின் கட்டாயங்களிலும்
விரலிலிருந்து
விழுந்து விழுந்து சேர்ந்த வார்த்தைகளில்
விழிகள்,,,,
மீண்டும் ஒருமுறை மூடிக் கொண்டன
உன்னிடம் சேர்ப்பிக்கப்படாததை எண்ணி!!!


No comments:

Post a Comment