Wednesday, October 21, 2015

சாரல்களில் நீ......


மழையின் சாரலில்
சரிந்து கொண்டே வருகிறாய் நீ!
நினைவுகளை நிறுத்த முடியாமல்
நீரில் விழுந்த எறும்பாய்
தத்தளிக்கிறது மனது...! 
ஜன்னலுக்கு வெளியிலிருந்து
வீசப்படும் பார்வைகளில்
பனிகளாகவே படர்ந்து வருகிறாய்
நீ...
மழை நின்றும் ...
இன்னுமொரு வெள்ளம்
எனக்குள் கரை புரளலாம்!
வழக்கம் போலவே!!!!

No comments:

Post a Comment