Monday, October 19, 2015

மரணம்


வாழ்க்கை

 வாழ்க்கை

மரணமாய் உன்னைத் துப்பும் நேரம்
மனிதம் நீ உணர்வாய்..
நடந்த பாதையின் தடங்களைத்
தொட்டுப் பார்க்க எண்ணி 
தோற்றுப் போவாய்..

வீசிய வார்த்தைகளின் உஷ்ணத்தை

நீயே உணர்ந்து நொந்து போவாய்
பேசத் துடித்தும் முடியாமல்
ஆன்மாவாய் அழுது தொலைப்பாய்..
நீ கைகுலுக்க மறந்த மனிதர்களின்
கால் தொட்டு மன்னிப்புக் கேட்க
துடிப்பாய்..

மரணம் ...

மீண்டுமொருமுறை உன்னை
குழந்தையாய் உயிர்ப்பிக்கும்..
ஆனால் நீதான்
வளர முடியாமல் சரிந்திருப்பாய்
உனக்கு மனிதம் கற்றுத்தரும்
மரணம்..

அதுவரை..

இப்பொழுதே ...
மனிதனாக வாழ்ந்தால் என்ன???

No comments:

Post a Comment