Monday, October 19, 2015

தேடல்கள்

ஒவ்வொரு முகமூடியாய்
போட்டுப் பார்க்கிறேன்..
எதுவும் எனக்கு ஏற்றதாய் தெரியவில்லை..
வேடம் தரித்து
அவர்களோடு நானும் நடந்து பார்க்கிறேன்
நிர்வாணமாய் நிற்க வைத்துவிட்டு
கூட்டம் வெகுதூரம்
முன்னே சென்று கொண்டிருக்கிறது..

புன்னகைகளை இரவல் பெற்று
கொஞ்சம் சிரிக்கப் பார்க்கிறேன் ..
எண்ணெயில் ஒட்டாத நீர்த்துளிகளாய்
அவை சறுக்கிப் போகின்றன ....
நடைகளை மாற்றிக் கொண்டும்
உடைகளை அமைத்துக் கொண்டும்
கொஞ்சம் கலந்து பார்க்கிறேன் ..
கவனமாக கழட்டப்பட்டு
காத தூரத்தில் வைக்கப்படுகிறேன்..

மரங்களாய் மாற முடியாமல்
மீண்டும் மனிதனாக உயிர்த்தெழுந்தால்..
மொத்தமாக ஒதுக்கிவிட்டு நடக்கிறது
உலகம் !!!

No comments:

Post a Comment