Monday, October 19, 2015

பிரிவின் விளிம்புகள்


நீ 
இல்லாத அந்தப் பொழுதுகள்

வானம் 
கருமையைப் பூசிக் கொண்டு
கண்ணீர் விடக் காத்திருக்கும்
வானவில்லை ஒடித்து
வாசல் ஓரம் போட்டிருக்கும்
காற்று!

மனதோரம் ஒரு மெல்லிய இசையாய்
ஏக்கம்
ஏதோ ஓர் பாடலில் மூழ்கியிருக்கும்
காலண்டர் தாள்கள் கிழிக்கப்படாமல்
கரங்கள் சோர்ந்து கிடக்கும் ...
போர்வைக்குள் தூக்கம்
திணறிக்கொண்டிருக்கும்..
செல்போன் குறுந்தகவல் அனைத்தும்
குற்றமாய்ப் போகும்
உன் பெயர் இல்லாமல்!
அழைக்கும் குரல்கள்
உன் வாசமின்றி
வாடையை முகத்தில் வீசிவிட்டுப் போகும்..

தொலைக்காட்சி அலைவரிசைகள்
மாறி மாறி..
கண்களைத் தானாக மூடிக்கொள்ளும்

நீ இல்லாத பொழுதுகள்...

தாய்வீட்டுக்குப் போவதாய்
நீ சொல்லிவிட்டுச் செல்லும்
போதெல்லாம் ...

என்னில் நானே தொலைந்த
வனாந்திரங்கள்...

^^முனியாண்டி ராஜ்.^^

No comments:

Post a Comment