Wednesday, October 19, 2016

திருவிழா வேண்டி



திருவிழா வேண்டி ....
===•••===•••===••
நீண்டுவிரிந்த நெடுஞ்சாலைகளிலும்
கைகுலுக்கிக் கொள்ளும் கட்டடங்களிலும்
சற்று ஒதுங்கிநின்ற அந்தஊர்
கொஞ்சம் செத்தே போயிருந்தது
நோயுற்றுப்போன அந்தச் சாலையின் வளைவில்
அந்த ஊரின்கீழ் 2 km என இருப்பதைப்
புதர்கள் விளக்கினால் படிக்கலாம்
சிறிய கடைத்தெரு என்றோ
சின்ன பட்டணம் என்றோ
பெரிய கிராமம் என்றோ
எப்படியாவது வைத்துக் கொள்ளுங்கள்
அந்த மைல்கல் பார்த்தே பசிநிறைத்த
காலமெல்லாம் உண்டு
தூரத்தின் வாசனையில்
கடைத்தெரு உணவுகள் நாசிக்குள்
நுழைவதெல்லாம் இருந்த காலம்
நெடுஞ்சாலை விலக்கிப் போகையில்
இன்றும் அக்கல் கண்ணில்..
ஒருமஞ்சள்துணி சுற்றப்பட்டு
சிவப்புப் பொட்டிட்டு
ஓரிரு வாழைப்பழ ஊதுபத்தியுடனும்!
தயாராகவே இருங்கள்...
.... இன்னும் சிலநாள்களில்
யாராவது வசூலூக்கு வரலாம்
தங்களுக்கான கோவில்களுக்கு!

#முனியாண்டி_ராஜ்

No comments:

Post a Comment