Wednesday, October 19, 2016

ஓசையில்லா குரைப்பில்

அதன் மொழியில்
எனக்குப் பேசத் தெரியவில்லை..
இருகால்தூக்கி வாலாட்டி
நாவால் நக்கி
ஓசையில்லா குரைப்பில்
ஏதோ சொல்லும் தருணம்..
அதன்மொழி புரியாமல்
ஒருபுன்னகையில் தடவிவிட்டு மட்டுமே
செல்ல முடிகிறது..
வாசலில் படுத்துருண்டு
இரவெல்லாம் பாதைகள் பார்த்து
திடீரென எழும் அரவங்களில்
இறுக்க உணர்வுகளில் விரைகையில்
'நானிருக்கிறேன் போய்ப்படு' என்பதுபோல்
வாலாட்டிக் கூறுகையில்...
மனிதர்களின் மொழி மரித்தே போகிறது
பல சமயங்களில்!




No comments:

Post a Comment