Wednesday, October 19, 2016

#அவதாரங்கள்_ஒருமுறை_மட்டுமல்ல..


#அவதாரங்கள்_ஒருமுறை_மட்டுமல்ல..
===•••===•••===•••===•••===••
அரக்கர்படைசூழ மிடுக்குடன்
நடந்து வந்தான் நரகன்
வழியெங்கும் அவன் கடித்துத் துப்பிய
எலும்புத்துண்டங்களின் வீச்சத்தில்
உயிர்தவிக்கும் மனிதங்களும்
சற்று மூச்சடக்கிக் கொண்டன
ஓடிஓடி ஒளிந்த நரன்களை
தேடித்தேடியெடுத்து விருந்தாக்கினான்
தேவர்களின் அலறலிலும்
நரர்களின் நடுக்கத் தேம்பல்களிலும்
சட்டென கண்விழித்த கடவுள்
புதிய பரிணாமத்தில் பழிதீர்க்க...
--------------
ஒருமரணத்தின் கொண்டாட்டதில்
வன்முறைகள் மீண்டும் கலந்தன
மதுபான ஆடம்பரங்களில்
நரகன்கள் பலர்தோன்ற..
இன்னொரு அவதாரம் கேட்டு
நரகாசுவரன் மீண்டுமொருமுறை
பிறந்து வரலாம்!
தேவர்களும் நரர்களும்
வதைபடலம் வேண்டி
திரும்பவும் ஒருதவம் மேற்கொள்ளலாம்!!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment