Wednesday, October 19, 2016

இரவுக் கவிதை


இனி எதுவுமில்லை 
எல்லாவற்றையுமே இழந்தாகி விட்டது
புறமுதுகிட மனம் ஒப்பவில்லை..
இறுதி ஆயுதமாய் நான்
தேடியெடுத்த சில கவிதைகளுடன்
உன் வாசல்நோக்கி விரைகிறேன்..
இரவுக் கவிதைகளிலாவது
உன் இதயம் கனியுமா என்று!
இரவெல்லாம் விழிகள் தொலைத்து
கனவுகள் துரத்தி..
ஒருசில நட்சத்திரங்கள் பிடித்து..
ம்ம் .. சொல்லிக் கொண்டே போகலாம்
உனக்காக
இன்னும் ஆயிரம் பொய்களை!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment