Wednesday, October 19, 2016

கல்லறை


அவனும் இங்கு வாழ்ந்ததாய்தான்
கூறுகிறார்கள்..
உன்போல் என்போல்
உண்டு உடுத்தி
குடும்பம் நடத்தி
படித்துக் கிழித்து...
வாழ்ந்ததாய்தான் கூறுகிறார்கள்
சான்றுகளும் காட்டுகிறார்கள்
வரிசை வீடுகள்..
மண்சுமந்த நிலவிரிப்புகள்..
கல்லாலும் மண்ணாலும் ஆன
ஓரிரு கட்டடங்கள்
அப்பனென உரிமையேற்க
ம்ம்ம்... பிள்ளைகள்..
இத்யாதி .... இத்யாதி..
கடைசியாய் கோட்டைபோல்
ஒரு கல்லறை..
அவனும் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்
பூமியில் மட்டும்!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment