Wednesday, October 19, 2016

தலைப்பில்லாத் தலைகள்...




தலைப்பில்லாத் தலைகள்...
===•••===•••===•••===••
எனக்கான உருவங்களை
அவர்களே வரைந்திருந்தார்கள்..
விரும்பிய வண்ணங்களில்
என்ன அழகுப்படுத்தி ஆரவாரித்திருந்தார்கள்
தங்கள் வண்ணங்களை
இன்னொருவர் மேல் பூசிவிட்ட பூரிப்பில்
எக்காளச் சிரிப்புகளைத்
தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள்
ஒவ்வொரு மனதிலும் நாறிய குப்பைகளை
மற்றொருவர்மேல் ஏற்றிவிட்ட ஆணவம்
நடைகளில் நாடகமாடியது
விரல்மாற்றியோ கைமாற்றியோ
எழுதி ஏமாற்றியதில்
தங்கள் கெட்டிக்காரத்தனத்தைத்
தாங்களாகவே புகழ்ந்து கொண்டார்கள்
மனதின் வக்கிரங்களில்
மிருகங்கள் தாராளமாகவே வெளியேறின
பெயர் மறைத்து
ஏதோ ஒரு பொய்ம்மைக்குள் ஒளிந்து
முகமின்றி உலாவிய அதை
அவ்வளவு சீக்கரம்
நிராகரிக்க முடியவில்லை..
மொட்டைக் கடிதமென்று!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment