Wednesday, October 19, 2016

நானும் உனக்கான கவிதையும்..



நானும் உனக்கான கவிதையும்..
===•••===•••===•••===•••=======

மின்விசிறியின் சீற்றத்தில்
அங்கொன்றும் இங்கொன்றும் பறந்திருந்த
காகிதங்கள் ஒவ்வொன்றாய்
பொறுக்கத் தொடங்கினேன்..............

சில எழுத்துகளிலும்
சில சொற்களிலும்
சில வரிகளிலும்
முடங்கிப் போய் அமர்ந்திருந்தன...............

உன்னைப்பற்றி கேட்காமல் எழுதிய
கவிதைகளைவிட...
நீ கேட்ட போது எழுதத் தொடங்கியவை
இன்னும் தவழ்ந்து கொண்டே...............

நீ மட்டும்
ஏதோ ஒரு எதிர்பார்ப்பில்
இமைக்கம்பிகளைப் பிடித்தவாறே
விழிகளோரத்தில்......!!!!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment