Wednesday, October 19, 2016

கொஞ்சம் கவிதைகளும் நிறைய கனவுகளும்


கொஞ்சம் கவிதைகளும் நிறைய கனவுகளும்
===•••===•••===•••==•••===•••===••
சுடுமணலில் பாதம் கொப்புளிக்க
நாவறண்டு நீர்தேடிய விழிகளில்
கானல்நீராய் கடந்தபோன மணல்திட்டுகள்போல்
கதிரின் கொடுமையில் கால்கள் அல்லாட
நிழல்நாடும் ஒரு நெடும்பயணத்தில்
மேகநிழல்களில் தொலைந்த
களைத்த ஓர்வழிபோக்கன்போல்
மௌனவில்லொடிக்க இராமனாய்
உன் வாசல்வரும் போதெல்லாம்
கானல்நீராய் போகிறேன்
நீ வீசும் அலட்சிப்பார்வைகளில்
சாளரங்களில் திடீரென
கடந்துநகரும் உன்நிழல்களில்
நானும் கொஞ்சம் களைப்பாற முயல்கையில்
படாரென அறைந்துமூடும்
வல்லோசையில் அதிர்ந்து களைகின்றன
நான் சுமந்துவந்த அத்துணைக் கவிதைகளும்
கொஞ்சம் கனவுகளும்..
இன்னும்
பல பாலைகளைக் கடக்க வேண்டுமெனில்
மீண்டும் மீண்டும் நான் அவதரிப்பேன்
உன் சாளர ஓரங்களில்
கொஞ்சம் கவிதைகளுடனும்..
நிறைய கற்பனைகளுடனும்!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment