Tuesday, June 21, 2016

தந்தையைத் தேடி

ஏதோ ஒரு வெளிச்சம்
என்
பாதைகளுக்கு ஒளியேற்றிக்
கொண்டிருந்தது..
சட்டென விழும்நேரம்
ஏதோ ஒரு கரம்
என்னைத் தாங்கிப் பிடித்தது
வழி தவறி
பாதம் விலகும் போது
உடல் சாய்த்து
பாலம் அமைத்து...

என் கனவுகளை
அது அலங்கரித்ததில்லை
என் மொழி ஆரங்களைக்
அது கண்டதுமில்லை..
வசவுகளின் வார்ப்புகளில்
சிரித்துக் கொண்டே
பல தடவை கடந்திருந்தது..
வேறுபட்ட உறவாக
என் உயிருள்
உறங்கிக் கொண்டே தான்
இருந்திருக்கிறது அது

'அப்பா' என்று
அழைத்த புதியதோர் குரலில்..
என் பாதைகளின்
வெளிச்சங்களைத் தேடிய போது
அது...
விண்ணில் எங்கோ
மறைத்து போயிருந்தது...

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment