Thursday, November 10, 2016

தூண்டில்

ஒவ்வொரு தூண்டிலிலும்
புழுவாய் நெளிந்து கொண்டிருந்தன அவை..
ஆசையில் பட்டெனக் கௌவும் மீனாய்
அவர்கள்தாம் வரித்து வைத்திருந்தார்கள்
என்னை ..
விற்பனை முகவர்களின் புழுக்களில்
நீந்திநழுவிச் செல்லும் போதும்
கைப்பேசிகளில் கழுத்தறுபட்டு
அழுகின்றன அழைப்புகள்..
நிராகரிக்கத் திணறும் தருணங்களில்
மூளையும் சலவை செய்யப்படும்
மறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்
துணிவுடன் மன்னிக்கவும் என்று!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment