Thursday, November 10, 2016

வருகை


அவள் எப்போதாவதுதான் வருவாள்
அதன் நேரமோ பொழுதோ
உறுதியற்ற நிலையிலேயே இருக்கும்
பெரும்பாலும்
ஏதோ ஒரு இறுக்கத்திலும் கனத்தலிலும்
மனம் எங்கேயாவது மௌனித்திருக்கும்..
அவசரகதிகளில் 
உடலின் அத்துணை அணுக்களிலிலும்
வன்மம் ஏதேனும் துளிர்க்கும் பொழுதுகளில்
வருடியாய் இருப்பதேயில்லை அவள்
அசதிகளில் சட்டெனச் சாய்ந்து
உறங்கங்களில் கரைந்துவிடும் நேரங்களிலும் 
சரி ...
நேரம் துரத்திய விடியலில் விழிக்கும்போதும் சரி .....
அவள் வருவதேயில்லை..
கட்டங்கட்டமாக மனிதரோடு மனிதராய்
தொலையும் தருணங்களில்
எங்கோ ஒரு பாறையின் உச்சியில்
இருப்பதுபோல்...
பார்வைகளைப் பதித்துவிட்டு
உதடறியா ஒரு சிறுபுன்னகையுடன்
மறைந்தே போகிறாள்!



No comments:

Post a Comment