Thursday, November 10, 2016

#இரயில்_சிநேகம்


#இரயில்_சிநேகம்
===•••===•••==
யாருமற்ற அந்தப்பெட்டியில்
நம்மோடு சேர்ந்தே வந்திருந்தன
அந்தப் புத்தகங்கள்..
மார்போடு அணைத்து எடுத்துப் படித்து..
ஒவ்வொரு அசைவிலும் நான்
தாள்களை மட்டுமே புரட்டிக் கொண்டிருந்தேன்..
புத்தகங்கள் உனக்குக் கொஞ்சம்
வலியைக் கொடுத்திருக்கலாம்
சிறுபுன்னகையோடு என் விலாசம்
நாடி வந்தாய்
அறிமுகங்களுக்குள் விரல்கள் மாறின...
புத்தகங்கள் ஓர் ஓரமாய் அமர்ந்து
நம்மையே கவனிக்கலாயின..
பிறப்பு இறப்பு வேலை வெட்டி
தோட்டம் பள்ளி கல்லூரி
நண்பர்கள் எதிரிகள் ஏமாளிகள்
ஏமாற்றியது ஏமாந்தது..
ம்ம்ம்.. இன்னும் இன்னும்
பயணம் முடியாத ஒரு தூரத்தில்
நீயும் இறங்கிக் கொண்டாய்..
ஒரு இரயில் சிநேகத்தின்
பொருளைக் கற்பித்துவிட்டு!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment