Friday, February 5, 2016

ஒரு கீறலின் வடு



வார்த்தைகளை எண்ணி எண்ணி
உதிர்த்துக் கொண்டே வருகின்றன
என் உதடுகள்…
எதற்கும் பதில் சொல்லாமல்..
சலனமுமில்லாமல்
மௌனமாகவே பேசிக் கொண்டிருக்கிறாய்
நீ!
இமைகளில் பாதுகாப்பில்
உன் விழிகள்….
இன்னும் பத்திரமாகவே இருக்கின்றன..
இறுக்கமாக!!
ஊமையாகவே!!!!!
-------முனியாண்டி ராஜ்.

No comments:

Post a Comment