Friday, February 5, 2016

எந்த வட்டத்தில் வாழ்வது



எந்த வட்டத்தில் வாழ்வது

வஞ்சக வார்த்தைகளில்
வாள் வீச்சாய் உயிரைச் சரிக்கும்
கருப்பிதய வட்டத்திலா…..
நன்னெறி வரிசையின் இரவலில்
நன்றி என்ற வார்த்தைகளில்
மீண்டும் மீண்டும் ஆதாயம் தேடும்
சுயநல மனிதர்களின் நிழலிலா….

மன்னிப்பு என்ற வார்த்தைகளில்
மறைந்து கொண்டு
மனதை மிதிக்கும் மயக்க விற்பன்னர்
தோட்டத்திலா…
உதடுகளில் இனிப்பையும்
உள்ளத்தில் இறுக்கமும் பூண்டு வாழும்
இதயமில்லா மாந்தரின்
இருள் உலகத்திலா…

எந்த வட்டத்தில் வாழ்வது ?

                                   **முனியாண்டி ராஜ்**

No comments:

Post a Comment