Friday, February 5, 2016

மழை அழகே..


கண்ணாடிகளை அறைந்து
சிதைந்து விழும் மழைத்துளிகள் மேல்
கொஞ்சம் கருணை எட்டிப் பார்க்கிறது….
சாலைகளில் சறுக்கிச் செல்லும்
வாகன வட்டயங்களிலிருந்து
பூவாய் விரிந்தெதெழுகிறது
வீழ்ந்துவிட்ட ஒரு மழையின் எச்சங்கள்

தடதடவென அறையும்
மழையின் ஓசையிலிருந்து
அவ்வளவு சீக்கரம் மனதை நகர்த்த முடியவில்லை..
அழகான மழையின் வார்ப்பில்
வாகன நெரிசலும் ஓர் அழகே!

No comments:

Post a Comment