Wednesday, April 6, 2016

வெறுமையும் மௌனமும்


எந்தப் பார்வைக்கும் பதிலின்றி
வெறுமையிலேயே வேக வைக்கிறாய்
வீசும் வார்த்தையைவிட
விழி சுரக்கும் மௌனங்கள் கொடிது..
இரவின் நீளம் 
நீ இல்லாத போது தெளிவாகிறது
உறங்கும் போது மட்டுமல்ல..
உறக்கம் கெடுக்கவும் நீ கனவாகவே
வருகிறாய்

வலமும் இடமும் புரண்டு
ஆடும் மாடும் எண்ணி...
இறுக இறுக விழி மூடி
நெருங்கும் நினைவுகளை நிர்ப்பந்தமாய்
வெளியேற்றி..
பிடிக்காப் பக்கங்களை
மீண்டும் மீண்டும் திருப்பி ...
உள்ளும் புறமும்
இரவை எட்டி எட்டிப் பார்த்து
ம்ம்ம்ம்....
எப்படி இழுத்தும் ..
..... உன்னைப் போலவே உறக்கமும்
கைகளுக்கு எட்டாமலேயே....

இரவின் மீது வெகுதூரம் நடந்தும்
என்னைக் கொல்வதாக
உன்
மௌனம் மட்டுமே இருக்கிறது..

ஒரு வெறுமையை எனக்குள் நிரப்பிவிட்டு!

**முனியாண்டி ராஜ்.**

No comments:

Post a Comment