Tuesday, April 5, 2016

கருணை


உன்னை 
எந்த 'இஸத்தில்' சேர்ப்பது 
இல்லாதவன்தான் இல்லாமையின்
நுணுக்கம் அறிந்தவன் என்பதிலா...
உயிர்களைத் தாண்டியதே
உண்மையின் கோடுகள் என்பதிலா..
எந்த வட்டத்திற்குள்
உன்னை வைப்பதென்றே அறியாமல்
அவதியுறுகிறேன் நான்.....

சுற்றும் முற்றும் தேடுகிறேன்
ஒளி பீச்சும் காமிராக்களிலோ
தம்படம் எடுக்கும் நவீனங்களிலோ
அரசியல் வண்ணம் கலக்கும்
அருவருப்பு விளம்பரங்களிலோ
முகநூல் சுய பதிவுக்கோ.
எதிலும்
நீ சிக்கியிருப்பதாய்த் தெரியவில்லை..

மானுடங்களை அனாவசியமாக
உதறிச் சென்று விட்டுச் செல்லும்
உன்னைப் பார்த்து
ஆறும் ஐந்தும் சேர்ந்தது
பதினொன்றென்று கணிதம் கூறட்டும்
ஏழாவது அறிவென்று
எந்த அறிவும் கூறிவிடும்..

நெல்லுக்கு இறைத்த நீர்
வாய்க்கால் வழியோடி...
உன் ஒருவனுக்காக
ஊரெல்லாம் பெய்யட்டும்
என்றாவது ஒருநாள் ...

அன்பு மழை!!

**முனியாண்டி ராஜ்.***

No comments:

Post a Comment