Saturday, November 21, 2015

மீண்டும் நான்

^^மீண்டும் நான்…^^
நானே தான்…
4  ஏக்களில் ஆறாம் ஆண்டில்
தடுக்கி விழுந்த நானேதான்…
அப்பொழுது எந்தக் கேமிராக்கிளிலும்
நான் சிக்காமல் ஒதுக்கப்பட்டது நினைவிருக்கிறது..
அந்த வலியின் வடு
இன்னும் ஆழ்மனதில் ஆழமாய் பதிந்திருக்கிறது..
எந்தப் பத்திரிக்கையும்
என் முகத்தை எடுத்துச் சிரிக்கவில்லை..
பின்வரிசையில் நிற்கக்கூட பள்ளிகள் தள்ளிவிட்ட பிறகு
பத்திரிக்கையை நொந்து என்ன பயன் சொல்..

நானேதான்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு
மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறேன்..
ஆறாம் ஆண்டின் வலி
என்னைச் செதுக்கிச் சிலையாக்கியிருக்கிறது…
இப்போது எந்தப் பத்திரிக்கையும்
என் வெற்றிப் புன்னகையைக் கேட்கவில்லை..
எந்த வரிசையிலும் நான் முன்னிலைப்படுத்தப்படவில்லை..
தாமிகளிலும் தன் புகழ்ச்சிகளிலும் மட்டுமே
என்னை புதுப்பித்துக் கொள்கிறேன்..
அந்நிய மொழியில் படிவம் 5 இன்
நேரடி ஏக்களாக அறிமுகப்படுத்தப்படுகிறேன்..
அந்நிய ஆசிரியர்களின் கைக்குலுக்கல்களில்
என்னை நானே குளிர்த்துக் கொள்கிறேன்..

பல்கலைக்கழகங்கள்..
எனக்கான பாதைகளை இலவயமாக
திறத்து வைத்திருக்கின்றன..
அரசாங்கத்தின் ஆதரவு நிதிகளில்
என் குடும்பமும் குளிர் காயலாம்…

……………………………..இருந்தும்
என்னைச் செதுக்கிய இந்த வடுவை
இன்னும் தடவிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்..!!

-      முனியாண்டி ராஜ்.

1 comment: