Tuesday, November 24, 2015

தமிழ்ப்பள்ளியே என் தேர்வு



மீண்டும் ஒலிக்கத் தொடங்கும்
அதே குரல்கள்..
உலக மொழிகளின் தாய் 
மடிப்பிச்சை ஏந்தி நடப்பாள் ..
நவம்பரும் டிசம்பரும்
பத்திரிக்கைகள் பலபலவாய்
படங்கள் போட்டு அழைக்கும்..

தமிழ்ச்சார்ந்த அழைப்புகளின் பதாகைகளில் ..
தமிழ்த்தாயும் கொஞ்சம்
நிழல் கேட்பாள்...
வாய் திறக்கா தலைவனும்
கடமையில் பல் காட்ட ...

களைப்பில் அமர்ந்த தமிழ்த்தாயோ
அலுத்துக் கொண்டாள்..
அட பாவிங்களா..
இத வருட முழுக்க
செஞ்சித் தொலைக்கக் கூடாதா ..

^^முனியாண்டி ராஜ்^^

No comments:

Post a Comment