Tuesday, March 22, 2016

வனமழிப்பு

வேர்கள் விரிந்த
ஒரு வனாந்திரத்தின் வயிற்றுப்படுகையில்
எழுந்து வருகிறது
என் எச்சம் ..
பச்சையங்கள் மடிந்த இந்த
வறட்டு நிலங்களில்
கற்பழிக்கப்பட்ட என் சகமரங்கள்
விறகாகமலேயே எரிக்கப்பட்டு விட்டன..
நாளை
கட்டடமாகவோ..
நெடுஞ்சாலைகளாகவோ..
புகை க்க்கும் தொழிற்பேட்டைகளாகவோ
இந்த வனங்களை மறக்கடிக்கலாம்..
அதற்குள்
காய்ந்த எங்கள் மரணங்களில்
கொஞ்சமேனும் நம்பிக்கை தருகிறேன்...
வா .. கண்ணே!

€€ முனியாண்டி ராஜ்.€€


No comments:

Post a Comment