Tuesday, January 19, 2016

தலைப்பு : மனிதம் இல்லா வெடிகுண்டுகள்


தலைப்பு : மனிதம் இல்லா வெடிகுண்டுகள்
குருதிக் கறைகளுடன்
குற்றங்களில் நனைந்த நெஞ்சங்கள்
உயிர்க்காவு தேடி
தரணியெங்கும் திரியும்..
மனித வெடிகுண்டுகளென
பெயர் வைத்து அழைக்கிறது அரசியல்

தளிர்களையும் மலர்களையும்
மனிதங்கள் சுமக்கும் மனிதர்களையும்
மிருக வெறியில் அறுத்தெறியத் துடிக்கும்
மின்னியல் மிருகங்களை 
மனிதன் கலந்து எவ்வாறு கூறலாம்..
உயிர் ஊடும் உடலத்தை
தானாகச் சிதைப்பது எந்தக் கடவுளின் வேண்டல் ..

எச்சரிக்கை வேண்டல்களிலும்
அண்டையில் சிதறும் உடல்களிலும் 
ஓலமிடும் அந்த உயிரின் சத்தம்
என் நாளங்களைக் கிழித்தெறியும் போது
...... நண்பா...
உன் உணர்வுகளைக் கொஞ்சமேனும்
அசைக்கவில்லையா...

நகக்கீறல்களை விட
விரல்கள் தீண்டல் இனிமையானது..

மதம் திறந்து வெளியே வா ..
மனிதங்களுடன் சற்றுத் தணித்து..
பேசி விட்டாவது போ!

^^முனியாண்டி ராஜ்^^


No comments:

Post a Comment