Tuesday, December 15, 2015

கண்களின் கைதி

^^கண்களின் கைதி^^
ஏதோ ஒரு திருப்பத்தில்
என் கவனம் கவிழ்ந்திருக்கலாம்..
சில நொடிகளில் பாதைகளை மறந்து
பாதங்கள்  மாறத் தொடங்கிய போதே
நான் விழித்திருக்க வேண்டும்
நிராகரிப்புகளின் வாசலில்
கொஞ்சமாவது நின்று பார்த்திருக்க வேண்டும்.
இல்லை….
இல்லை….

அந்த விழிகளில் சிக்குண்ட மனம் மட்டும்
மீட்கப்படாத கைதியாய் சிக்கியிருக்கிறது..
விலாசம் தொலைத்த கடிதம் போன்று
ஒவ்வொரு வாசலாய் எட்டி எட்டிப் பார்த்து
திரும்பிக் கொண்டே இருக்கிறது..
அதுவரை…
உன் விழிகளின்
உன் கைதியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!

-       முனியாண்டி ராஜ்.

No comments:

Post a Comment