நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன
இரவு முழுவதும் சுமந்து கொண்டு
இந்தக் காலையில்
உன் வாசல்முன் விழிக்கிறேன்
இரவுகள் நான் சுமந்த கனத்தின் எடை
உன்
பிடிவாதத்தின் அளவில் பாதியிருந்தது
மௌனத்தைவிட உயிரைப் பிழிந்தது
புரிதலைவிட கொஞ்சமாக வறண்டிருந்தது
நீ பிய்த்தெறிந்த பொழுதுகள்
மீதப்பட்ட விந்தையைத் திரை விலக்கிய
கண்ணாடி வழியே ஒளிந்து பார்க்கிறாய்
இங்கேயே இறக்கிவிட்டுப் போய் விடலாம்தான்
என் மரணத்தைவிட உன் கனம் பெரிதென
அப்போதும் நீ உணர மாட்டாய்
06052020

No comments:
Post a Comment